ஆம்னி பேருந்து அதிக கட்டணம்: உடனடியாகப் புகார் தெரிவிக்கலாம்! – போக்குவரத்து ஆணையரகம் அறிவிப்பு

 சென்னை, அக்டோபர் 15, 2025 : வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் அதிக அளவில் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதால், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் வரப்பெற்றுள்ளன. இந்தப் புகார்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள, பொதுமக்கள் உடனடியாகப் புகார் தெரிவிக்கலாம் என போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம், கிண்டி, சென்னை, அறிவிப்பு வெளியிட்டுள்ளது



புகார் தெரிவிக்கும் முறைகள்:

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்துப் புகார் தெரிவிக்க விரும்புவோர், கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் மூலம் நேரடியாகவோ அல்லது வாட்ஸ் அப் (WhatsApp) வழியாக குறுஞ்செய்தி (Text) அல்லது குரல் பதிவு (Voice message) மூலமாகவோ புகார்களைத் தெரிவிக்கலாம்

மண்டல வாரியான தொடர்பு எண்கள்:

பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதியாக, மாநிலத்தின் முக்கிய மண்டலங்களுக்கான போக்குவரத்து ஆணையரகங்கள் மற்றும் துணைப் போக்குவரத்து ஆணையரகங்களின் தொலைபேசி எண்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன:

வ.எண்ஆணையரகம் / துணை ஆணையரகம்தொலைபேசி எண்கள்
1போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம், சென்னை1800 425 6151
2இணைப் போக்குவரத்து ஆணையரகம், (வடக்கு), சென்னை97893 69634
3இணைப் போக்குவரத்து ஆணையரகம், (தெற்கு), சென்னை93613 41926
4இணைப் போக்குவரத்து ஆணையரகம், மதுரை90953 66394
5இணைப் போக்குவரத்து ஆணையரகம், கோயம்புத்தூர்93848 08302
6துணைப் போக்குவரத்து ஆணையரகம், விழுப்புரம்96773 98825
7துணைப் போக்குவரத்து ஆணையரகம், வேலூர்98400 23011
8துணைப் போக்குவரத்து ஆணையரகம், சேலம்78456 36423
9துணைப் போக்குவரத்து ஆணையரகம், ஈரோடு99949 47830
10துணைப் போக்குவரத்து ஆணையரகம், திருச்சிராப்பள்ளி90660 32343
11துணைப் போக்குவரத்து ஆணையரகம், விருதுநகர்90257 23800
12துணைப் போக்குவரத்து ஆணையரகம், திருநெல்வேலி96981 18011
13துணைப் போக்குவரத்து ஆணையரகம், தஞ்சாவூர்95850 20865

பொதுமக்கள் இந்த எண்களைப் பயன்படுத்தி, அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்துப் புகார் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்க ஒத்துழைப்பு வழங்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Post a Comment

Previous Post Next Post

Contact Form