தற்போதுள்ள பெரும்பாலான மக்கள் ஆங்கிலத்தில் கதைத்தால் மட்டும் தான் பெருமை என்றும், தமிழில் கதைத்தால் அது அவமானம் என்று நினைத்து வருகின்றனர்.அதனால் தங்களது குழந்தைகளைக் கூட ஆங்கிலம் வாயிலான பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகின்றனர். காரணம் தனது நாட்டைவிட்டு வெளிநாடு என்று சென்றுவிட்டால், ஆங்கிலம் தெரியாமல் இருக்கமுடியாது என்பதே.சரி அவ்வாறு ஆங்கிலத்தில் கதைப்பவர்களை நாம் அவதானித்திருப்போம்… இளம்பெண்கள், இளைஞர்கள், பணக்காரராக தோற்றமளிப்பவர்கள் ஆங்கிலத்தில் கதைப்பார்கள். சரளமாக ஆங்கிலத்தைக் கதைப்பவர்களை பார்த்தால் சிலருக்கு கொஞ்சம் பொறாமையாகத் தான் இருக்கும்.இங்கு பாட்டி ஒருவர் ஆங்கிலத்தில் கதைத்து அசத்துகிறார். அவரிடம் கேள்வி கேட்கும் இளம்பெண் கூட சில இடங்களில் சரளமாக பேசுவதற்கு தயங்கிய போதும், பாட்டியோ ஒரு பிசுறு இல்லாமல் பட்டையக் கிளப்பியுள்ளார்.இந்த வயதிலும் என்ன ஒரு மகிழ்ச்சி, சுறுசுறுப்பு, என்று பார்ப்பவர்களை ஆச்சரியப்படத்தோன்றும் காட்சி இதோ…
- Monday
- March 8th, 2021
- Submit Post